முதல்பக்கம்
பாடல்கள்
தமிழ் பாடல்கள்
பாரதியார் பாடல்கள்
ஆங்கலப் பாடல்கள்
காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்
கதைகள்
கதைகள் பாடல்களாக
ஸ்லோகங்கள்
திருக்குறள்
காணொலி
எங்களைப்பற்றி
உங்கள்கருத்துகள்
பாரதியார் பாடல்கள்
வந்தே மாதரம்
பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி
நாட்டு வணக்கம்
பாரத நாடு
ராகம்--புன்னாகவராளி
எங்கள் நாடு
வெறிகொண்ட தாய்
இன்னும்...
பாரத மாதா நவரத்தின மாலை
பாரத தேவியின் திருத்தசாங்கம்
தாயின் மணிக்கொடி
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்
பாரத சமுதாயம்
ஜாதீய கீதம்-1
ஜாதீய கீதம்-2 (புதிய மொழி பெய்ர்ப்பு)
செந்தமிழ் நாடு
தமிழ்த் தாய்
தமிழச் சாதி
வாழிய செந்தமிழ்
சிறிதாக்க...
பாரத தேவியின் திருத்தசாங்கம்
நாமம் (காம்போதி)
பச்சை மணிக்கிளியே!பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய்!-இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு. 1
நாடு (வசந்தா)
தேனார் மொழிக்கிள்ளாய்!தேவியெனக் கானந்த
மானாள்பொன் னாட்டை அறிவிப்பாய்! வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி. 2
நகர் (மணியரங்கு)
இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்னையுற வாழும் நகரெ துகொல்?-சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம். 3
ஆறு (சுருட்டி)
வன்னக் கிளி!வந்தே மாதரமென் றே துவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்!-நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன் விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து. 4
மலை (கானடா)
சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய்!-ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு. 5
மலை (கானடா)
சீருஞ் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைதத்தாய்!-தேரின்
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சுகம்
அரிமிசையே ஊர்வாள் அவள். 6
ஊர்தி (தன்யாசி)
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்!
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்?-பொரு(பவர்மேல்
தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேறு. 7
படை (முகாரி)
ஆசை மரகதமே!அன்னை திரு முன்றிலிடை
ஓசை வளர்முரசம் ஓதுவாய்!-பேசுகவோ
சத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய்
முத்திதரும் வேத முரசு. 8
தார் (பிலக்ரி)
வாராய் இளஞ்சுகமே!வந்திப்பார்க் கென்றுமிடர்
தாராள் புனையுமணித் தார்கூறாய்!-சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா மரைத்தார் புனைந்து. 9
கொடி (கேதாரம்)
கொடிப்பவள வாய்ககிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடி தான் மற்றென்?-அடிப்(பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி.
- ஆசிரியர் :*
9/19
Previous
Next
Share