முதல்பக்கம்
பாடல்கள்
தமிழ் பாடல்கள்
பாரதியார் பாடல்கள்
ஆங்கலப் பாடல்கள்
காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்
கதைகள்
கதைகள் பாடல்களாக
ஸ்லோகங்கள்
திருக்குறள்
காணொலி
எங்களைப்பற்றி
உங்கள்கருத்துகள்
பாரதியார் பாடல்கள்
வந்தே மாதரம்
பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி
நாட்டு வணக்கம்
பாரத நாடு
ராகம்--புன்னாகவராளி
எங்கள் நாடு
வெறிகொண்ட தாய்
இன்னும்...
பாரத மாதா நவரத்தின மாலை
பாரத தேவியின் திருத்தசாங்கம்
தாயின் மணிக்கொடி
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்
பாரத சமுதாயம்
ஜாதீய கீதம்-1
ஜாதீய கீதம்-2 (புதிய மொழி பெய்ர்ப்பு)
செந்தமிழ் நாடு
தமிழ்த் தாய்
தமிழச் சாதி
வாழிய செந்தமிழ்
சிறிதாக்க...
ஜாதீய கீதம்-1
பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய
வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு
1. இனிய நீர்ப் பெருக்கினை!இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)
2. வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்வகை இன்பம், வரம்பல நல்குவை! (வந்தே)
3. முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என் றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்!அருளினை போற்றி?
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே)
4. நீயே வித்தை, நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)
5. தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவிஇங் குனதே! (வந்தே)
6. ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!
வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ! (வந்தே)
7. போற்றி வான்செல்வீ! புரையிலை, நிகரிலை!
இனிய நீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி! (வந்தே)
- ஆசிரியர் :*
14/19
Previous
Next
Share