முதல்பக்கம்
பாடல்கள்
தமிழ் பாடல்கள்
பாரதியார் பாடல்கள்
ஆங்கலப் பாடல்கள்
காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்
கதைகள்
கதைகள் பாடல்களாக
ஸ்லோகங்கள்
திருக்குறள்
காணொலி
எங்களைப்பற்றி
உங்கள்கருத்துகள்
பாரதியார் பாடல்கள்
வந்தே மாதரம்
பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி
நாட்டு வணக்கம்
பாரத நாடு
ராகம்--புன்னாகவராளி
எங்கள் நாடு
வெறிகொண்ட தாய்
இன்னும்...
பாரத மாதா நவரத்தின மாலை
பாரத தேவியின் திருத்தசாங்கம்
தாயின் மணிக்கொடி
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்
பாரத சமுதாயம்
ஜாதீய கீதம்-1
ஜாதீய கீதம்-2 (புதிய மொழி பெய்ர்ப்பு)
செந்தமிழ் நாடு
தமிழ்த் தாய்
தமிழச் சாதி
வாழிய செந்தமிழ்
சிறிதாக்க...
செந்தமிழ் நாடு
1. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)
2. வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)
3. காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
5. நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. (செந்தமிழ்)
6. கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. (செந்தமிழ்)
7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
8. சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)
9. விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)
10. சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
- ஆசிரியர் :*
16/19
Previous
Next
Share